Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்தது: 20 பெண்கள் தப்பினர்

உத்திரமேரூர் ஏப். 16– 
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரகடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் காஞ்சீபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கம்பெனி பஸ்சில் செல்வது வழக்கம்.
இன்று அதிகாலை உத்திரமேரூர், காவனூர் புதுச்சேரி, மாகரல் உள்ளிட்ட பகுதியை 20–க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ்சில் கம்பெனிக்கு சென்றனர். உத்திரமேரூரை சேர்ந்த குணசேகரன் பஸ்சை ஓட்டினார்.
புத்தகளி அருகே வந்த போது ஒரு திருப்பத்தில் சமீபத்தில் பெய்த 
மழையால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. அதில் பஸ் இறங்கிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர்.
இதில் இடிபாடுகளில் சிக்கிய உத்திரமேரூரை சேர்ந்த சந்தியா, கீர்த்திகா, ஜமீனா உள்பட 20 பெண்கள் காயம் அடைந்தனர்.
அருகில் உள்ள வயலில் வேலை செய்தவர்களும், அவ்வழியே வாகனங்களில் வந்தவர்களும் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த கீர்த்திகா உள்பட 3 பேருக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிர்ஷ்ட வசமாக 20 பெண்கள் உயிர் தப்பினர்.  இது குறித்து மாகரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments