Disqus Shortname

குடிசை வீட்டில் தீ விபத்து

உத்தரமேரூர் ஆக,31
உத்தரமேரூர் மேலாண்டை கொல்லை மேட்டுத் தெருவில் கூரை வீட்டில்வசிப்பவர்கள் மாரியம்மாள் (70) அதன் அருகில் உள்ள கூரை வீட்டில் ஆராமுதன்(41) தனது மனைவி மாரியுடன் வசித்து வருகிறார். மாரியம்மாள் வீட்டில்தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் சமைப்பதற்காகஅடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக திடீரென தீ மேல்கூரை மீது பட்டு கூரை பற்றியது அதை கண்ட மாரியம்மாள் பதறியடித்து வெளியே ஓடிவந்தார். கூச்சலிட்டு அருகில் இருந்த பொதுமக்களை அழைத்தார் பொது  மக்கள் தீயை அணைக்க முயன்றனர். காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவெனப்பரவி பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஆராமுதன் (41) வீட்டுக்கு தீ பரவியது,தீ  கட்டுக்கடங்காமல் அதிவேகமாக பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது  தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயைஅணைத்தனர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்துசேதமானது. இது குறித்து உத்தரமேரூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

No comments