Disqus Shortname

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர் செப், 18
உத்தரமேரூர் அடுத்த வினோபாநகர் பகுதியில் வட்ட சட்டப் பணிகள் குழு
சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி
மன்ற துணைத் தலைவர் கண்ணியம்மாள்முனுசாமி தலைமை தாங்கினார். உத்தரமேரூர்  குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். இதில் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர்களுக்கான  உரிமைகள், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள்,
கல்வி உதவிதொகை, கட்டாயக் கல்வி, அரசின் நல திட்டங்கள் பெறுவது
கொத்தடிமைகள் மீட்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது பற்றி விளக்கி கூறினார். இந்த நிகழ்ச்சியில் உத்தரமேரூர்
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி, வழக்கறிஞர்கள் கிருஷ்ணன் மற்றும் வினோபாநகர் பகுதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் மூத்த நிர்வாகி


இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.

No comments