Disqus Shortname

ஸ்ரீ.மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூர் செப், 16

உத்தரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கோவில்
ஸ்ரீ.மாரியம்மன் கோவிலில் இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு
விமரிசையாக நடைப்பெற்றது. இக்கோவிலில் புணரமைக்கும் பணி கடந்த சில
மாதங்களாக நடைப்பெற்றது. பணி முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நேற்று
நடைப்பெற்றது. கும்பாபிஷேகதை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதிபூஜை,
வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை, முதல்காலபூஜை, கலசபூஜை, ஹோமம்,
நவக்கிரஹபூஜை, துர்கைபூஜை, துவாரபூஜைகள் போன்ற பல்வேறு பூஜைகள்  நடந்தது.
இதை தொடந்து நேற்று காலை புனித நீர் கொண்டு வந்து கலசத்தின் மீது புனித
நீர் உற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவிற்கு வந்த
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை
நாஞ்சிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் அனுசுயாநந்தன் மற்றும் விழா
குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments