Disqus Shortname

உத்திரமேரூர் செல்ல பேருந்து தேவை

உத்திரமேரூர்  செப்,24 : 'உத்திரமேரூர் செல்ல, நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என, குண்ணவாக்கம் உள்ளிட்ட, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், குண்ணவாக்கம் அருகே காட்டுக்கொள்ளை, வாடாதவூர், சித்தமல்லி, மருதம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து, உத்திரமேரூர் செல்ல தனியார் மினி பேருந்து ஒன்றை தவிர, அரசு பேருந்து ஏதும் இயக்கப்படாத நிலை உள்ளது. இதனால், இந்த மினி பேருந்தை தவறவிட்டால், இப்பகுதிகளை சேர்ந்தோர், 5 கி.மீ., துாரத்தில் உள்ள, திருப்புலிவனத்திற்கு நடந்து அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து, வாடாதவூர் பகுதிவாசிகள் கூறுகையில், 'இப்பகுதிகள் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், இப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், விவசாயிகள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரும், போக்குவரத்து பிரச்னையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உத்திரமேரூர் செல்ல நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments