Disqus Shortname

திருக்குறளை ஆடல் பாடல் மூலம் கற்பித்தல்

உத்திரமேரூர் செப்,02

உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஒன்று முதல் மூன்று  வார்டு) மாணவர்களுக்கு திருக்குறளின் பெருமையை விளக்கும் வகையில் புதுமையான முறையில் கற்பித்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.
கரூர் மாவட்டம், கடவூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுந்தரமகாலிங்கம் திருக்குறளை ஆடல் பாடல்கள் மூலம் புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவையோடு கற்றுக் கொடுத்தார்.
குறள் மட்டுமின்றி நடனம் மூலம் அந்த குறள்களுக்கான விளக்கத்தையும் அளித்தார். இந்தப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார்.

No comments