Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் சென்னையை சேர்ந்தவர்

 உத்தரமேரூர் ஜீலை,31

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.  அவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுபற்றி  போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில்  இதே போல  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி–சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த இவரும்  யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.  
இந்த நிலையில்  அவரது சட்டைப் பையில் புதுவை போட்டோ ஸ்டூடியோவின் அடையாள அட்டை இருந்தது. எனவே அவர் புதுவையை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்பட்டது  இந்த நிலையில் கொலையுண்ட 2 பேரும் சென்னையை சேர்ந்த நண்பர்கள் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

சுரேஷ் 


இதுபற்றிய விவரம் வருமாறு:–செஞ்சி அருகே கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இந்திரசேகர் மகன் சுரேஷ் (வயது 25), ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.

உத்திரமேரூர்  அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர்
மாதவரம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அசோக் (26). இவர் மீது கொடுங்கை யூரில் ஆட்டோ பாட்ஷா என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது.

கொடுங்கையூர் ஜம்பு லிங்கம் நகரில் மனைவியுடன் வசித்து வந்த அசோக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்ப வில்லை.

அசோக் (26)
பழைய வண்ணாரப் பேட்டை மாடல்லேன் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேசும், அசோக்கும் நண்பர்கள். 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாக வெளியில் சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.

அசோக் கொலை செய்யப்பட்டது பற்றிய தகவல் கிடைத்ததும் மாதவரத்தில் உள்ள அவரது தாயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், 2 பேரும் ஒன்றாக வெளியில் சென்றிருந்த விவரம் தெரிந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்னர் தனது தாயிடம் போன் செய்து பேசிய அசோக், சுரேசுடன் தாம்பரத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின்னர் தான் இருவரும் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுரேசும், அசோக்கும் கொலை செய்யப்பட்டது எப்படி? அவர்களை கொலை செய்தது யார்? என்பது பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

இவர்களை சென்னையை சேர்ந்த சிலர்தான் காரில் கடத்தி கொலை செய்திருக் கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக செஞ்சி மற்றும் உத்திரமேரூர் போலீசார் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அசோக் மீது கொலை வழக்கு உள்ளதால், அது தொடர்பான முன்விரோ தத்தில் அவர் தீர்த்துக் கட்டப் பட்டிருக்கலாம் என்றும் உடனிருந்த சுரேசும் இதற்கு பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

செஞ்சியில் கொலை யுண்ட சுரேஷ்குமார் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டை அறுப்பது போல அவரது கழுத்தை அறுத்த கொலை யாளிகள் தலையிலும் பலமாக வெட்டியுள்ளனர்.

எனவே, சுரேஷ்குமா ருக்கும் பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்து அதனால் இந்த இரட்டை கொலை நடந்ததா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. இருப்பினும் கொலையாளிகள் யார்? எதற்காக 2 பேரையும் கொன்றார்கள் என்கிற உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இது பற்றி செஞ்சி மற்றும் உத்திரமேரூர் போலீசார் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மாதவரம், வண்ணாரப் பேட்டை போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருவொற்றியூரில் காதல் தகராறில் விக்கி என்ற வாலிபர் கடத்தப்பட்டு ஆந்திராவில் கொலை செய்து வீசப்பட்டார். இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் சென்னையில் இருந்து மேலும் 2 வாலிபர்கள் கடத்தி படுகொலை செய்யப் பட்டிருக்கும் சம்பவம் சென்னை போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





No comments