Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வயலில் வாலிபர் சரமாரி வெட்டி கொலை:

உத்திரமேரூர் ஜீலை,30:
 உத்திரமேரூர் அருகே வாலிபர் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். பெண் விவகாரம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உத்திரமேரூர் அருகே தளவராம்பூண்டி செல்லும் சாலையில் தனியார் ஒருவரது நிலம் உள்ளது. இன்று காலை அந்த வழியாக சிலர் வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர், கழுத்து, தலை, முதுகு என பல இடங்களில் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மூளை சிதறியிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.மதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன், உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். அவரது கைகள் கயிறு மூலம் பின்னால் கட்டப்பட்டிருந்தது. அதற்கு மேல் அவரது சட்டை கிழிந்திருந்தது.சடலமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வெட்டி கொலை செய்துள்ளனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.முன் விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தார்களா அல்லது பெண் விவகாரம் தொடர்பாக யாராவது தீர்த்துக் கட்டினார்களா என்ற கோணத்தில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments