உத்தரமேரூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணி எம்.எல்.ஏ.ஆய்வு
உத்தரமேரூரில்
செவ்வாய்க்கிழமையன்று புறவழிச்சாலை அமைக்க உள்ள தடயங்களை உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன் பார்வையிட்டு பணியின் விபரங்களை கேட்டறிந்தார். உத்தரமேரூரில்
போக்குவரத்து பாதிப்பால் பொது மக்கள் மாணவ-மாணவியர்கள், வியாபாரிகள், அவதியுற்று வருகின்றனர்.
இது குறித்து எம்.எல்.ஏ.விடம் புறவழிச்சாலை (பைபாஸ்) அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏ. தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் முதல்வர் புறவழிச்சாலை அமைக்க
உத்தரவிட்டு இப்பணிக்காக நிதி ஒதுக்கி பணி அமைத்து தர உத்தரவிட்டுள்ளார். காஞ்சி வருவாய்
கோட்ட அலுவலர் சந்திரன் பணியின் விவரங்களை எம்.எல்.ஏ.விடம் எடுத்து கூறினார். இப்பணி
உத்தரமேரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருணாசலப்பிள்ளை சத்திரத்தில்
இருந்து பிரிந்து வேடபாளையம் ஏரிக்கரையை சென்று அடையும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
உத்தரமேரூர் வட்டாட்சியர் ரவி, சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், ஒன்றியகழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு, மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் கா.ஜெயவிஷ்ணு, மாவட்டகுழு உறுப்பினர்
சுமதிகுணசீலன், புலியூர் தலைவர் ஆர்.பழனி, பொ.சசிக்குமார், பூந்தண்டலம் ராஜேந்திரன்
உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
No comments