Disqus Shortname

உத்திரமேரூர் ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயிலில் 508 பால் குட அபிஷேகம்

உத்திரமேரூர்,ஜீலை,30 :
உத்திரமேரூர் ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயில் 24ம் ஆண்டு ஆடிப்பூர உற்சவம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் முத்து பிள்ளையார் கோயிலில் இருந்து 508 பால்குடங்களுடன் பெண்கள், பஜார்வீதி வழியாக நாதஸ்வர வாத்தியம், சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.முன்னதாக காலையில், அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.. பகல் 12 மணிக்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ துர்க்கை அம்மன் வார வழிபாடு மன்றம், மகளிர் வார வழிபாடு மன்றம் மற்றும் கிராம பொது மக்கள் செய்தனர்.

No comments