Disqus Shortname

உத்தரமேரூர் ஸ்ரீமாதிரியம்மன் கோயில் 32-ம் ஆண்டு உற்சவம்

உத்தரமேரூர் ஜீலை -13
      உத்தரமேரூர் ஸ்ரீமாதிரியம்மன் கோயில் 32-ம் ஆண்டு உற்சவம் நிறைவு விழா நடந்தது.  லட்சுமி, குபேர, கணபதி பூஜை ஆரம்பித்து அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது.  பிற்பகல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.   மறுநாள் காலை அம்மனுக்கு கூழ்வார்த்தல், ஊரணிபொங்கல் வைத்தல், கும்பம் போடுதல் முடிந்தபின் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதிஉலா வந்தது.  பக்தர்கள் விரதமிருந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தாவும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளருமான கே.தயாளன் சிறப்பாக செய்திருந்தார்.

No comments