அறிவியல் கண்காட்சி
உத்தரமேரூர்
மார்ச்,04
உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்.சி.வி.இராமன்
பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர் எ.பச்சையப்பன்
கண்காட்சியை துவக்கிவைத்தார். ஊராட்சி மன்றத்தலைவர் முருவம்மாள்செல்வன், முன்னாள்
தலைவர் சுப்பிரமணியன், இராமு, ஜெயக்குமார், கிராமகல்விக்குழுவினர், பள்ளிமேலாண்மைக்குழுவினர்
பெற்றோர்கள் காட்டுப்பாக்கம், மேனலூர், பூந்தண்டலம், மேல்தூளி ஆகிய பள்ளி
மாணவர்கள் ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம்
வகுப்பு மாணவர்கள் வரை இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணினி போன்ற
அரங்கங்களில் கண்காட்சி பரிசோதனை செய்து காட்டினர். கண்காட்சி ஏற்பாட்டினை தலைமை
ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments