Disqus Shortname

தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

உத்தரமேரூர்மார்ச்,29
உத்தரமேரூர் ஒன்றியத்தில் சனிக்கிழமை காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளர் ஜி.செல்வம் 39 ஊராட்சிகளில் வாக்குச் சேகரித்தார்.
மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன் தலைமையில் அவைத் தலைவர் சாலவாக்கம் க.சுந்தர், உத்தரமேரூர் ஒன்றியச் செயலர் இரா.நாகன் முன்னிலையில் ஜீப்பில் சென்று தி.மு.க.  தலைவர் கருணாநிதியின் சாதனைகளைக் கூறி வாக்கு கேட்டனர்.
ஆதவப்பாக்கம், காவாம்பயிர், புலிவாய், கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலம்பாக்கம், அழிசூர், திணையாம்பூண்டி, களியாம்பூண்டி, மேல்பாக்கம், அனுமந்தண்டலம், இளநகர், பெருநகர், விசூர், மானாம்பதி, எம்.கண்டிகை மேல்தண்டரை, இராவத்தநல்லூர், காரணை அம்மையப்பநல்லூர் பென்னலூர் மேனலூர், அரசாணிமங்கலம், ஒட்டந்தாங்கல் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.
மாவட்ட நிர்வாகி ஞானசேகரன், பேரூர் செயலர் என்.எஸ்.பாரிவள்ளல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, டி.கே.கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments