உத்தரமேரூரில்25 சவரன் நகை 2 கிலோ வெள்ளி 75 ஆயிரம் பணம் திருட்டு
உத்தரமேரூரில்
செங்குந்தபிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் மருத்துவர் கே.முருகன் இவரது மனைவி
தமிழ்ச்செல்வி இவர்களுக்கு மதன் என்ற ஒரு மகன் உள்ளார். இவரது மகனின் மேல் படிப்பிற்க்காக
செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் வாரம் ஒரு முறை உத்தரமேரூரில்
உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து செல்வார்கள் இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டை திங்கட்கிழமை காலை வீட்டு வேலை செய்யும் பெண் கதவை
திறக்க சென்ற போது பூட்டு உடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள காவல்
நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து
டாக்டரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தரமேரூர் வந்த தமிழ்ச்செல்வியிடம்
விசாரித்த போது பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகை 2 கிலோ வெள்ளி பாத்திரம் ரொக்கம்
ரூபாய் 75 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக கூறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து
வந்த காவல்துறையினர் கைரேகை பதிவு செய்தனர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையை மேற்கொண்டனர் மாவட்ட காவல்துறை துணை கண்கானிப்பாளர் இராஜேந்திரன்
செய்யூர் இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் உத்தரமேரூர் காவல் துறை ஆய்வாளர் விசாரித்து வருகின்றனர்.
No comments