Disqus Shortname

கல்குவாரியில் வெடி விபத்தில் ஒருவர் மரணம் ஒருவர் படுகாயம்

உத்தரமேரூர் மார்ச்,27
உத்தரமேரூர் தாலுக்காவிற்க்குட்பட்ட மதூர் ஊராட்சியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு சிறுமைலூர், மதூர், போன்ற அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று காலை கல் உடைப்பதற்க்காக வைக்கப்பட்டிருந்த வெடி வெடித்ததில் அங்கு பணிபுரிந்துக்கொண்டிருந்த மதூரை சேர்ந்த கணேசன் (47) மற்றும் செல்வம் (25) இருவரும் சிக்கிக்கொண்டனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார் இவருக்கு இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். செல்வம் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து சாலவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கடந்த ஆண்டு செப்டம்பம் மாதம் 9-ம் தேதி இதே கல்குவாரியில்   இராஜேந்திரன் மகன் ஆறுமுகம் என்பவர்  உயிர் இழந்தது குறிப்பிடதக்கது.

No comments