Disqus Shortname

தமிழக முதல்வர் பிரதமராக இந்திய குடியரசு கட்சி பாடுபடும் மாநில தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன்

உத்தரமேரூர் மார்ச்,24

உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் இந்திய  குடியரசு கட்சி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி அ.தி.மு.கவேட்பாளர் மரகதம்குமரவேலுக்கு இரட்டை இலைக்கு வாக்கு கேட்கும் கூட்டம் நடந்தது. இந்திய குடியரசு கட்சி காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் என்.சம்பத் தலைமை தாங்கினார். விசூர் வி.கன்னியப்பன்.மாவட்ட அமைப்பு செயலாளர் கே.எம்.கோபால், முன்னிலை வகித்தனர். பஞ்சமி நில மீட்பு போராளி அழிசூர் எம்.ராதாகிருஷ்ணன், உத்தரமேரூர்ஒன்றிய செயலாளர் என்.ஏ.தியாகராஜன் வரவேற்றனர். குடியரசு கட்சி மாநில பொது செயலாளர் சி.செங்குட்டுவன், மாவட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.மங்காபிள்ளை மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கே.லட்சுமணன், தங்க.பஞ்சாட்சரம், கே.கங்காதரன், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் மற்றும் இந்திய குடியரசு கட்சி தமிழ் மாநில தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன் ஆகியோர் இரட்டை இலைக்கு வாக்கு  சேகரித்து பேசினார்கள்.
 இக்கூட்டத்தில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு உட்பட அ.தி.மு.கவினர் கலந்த கொண்டனர். முடிவில் உத்தரமேரூர் இந்திய குடியரசு கட்சி நகர தலைவர் எம்.மாணிக்கம் நன்றி கூறினார்.

No comments