Disqus Shortname

உத்தரமேரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி ம.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம்

உத்தரமேரூர் மார்ச்,25
காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி, உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் மல்லை சத்யா அறிமுகம் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று உத்தரமேரூரில் நடந்தது. ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் மல்லை சத்யா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, டாக்டர் அம்பேத்கர் பெரியார் அண்ணாசிலைகளுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார். அதன்பின் நடைபெற்ற செயல்வீரர்கள்  கூட்டத்திற்கு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ரமேஷ் பிரபாகரன், பா.ம.க. மாவட்ட செயலாளர் பரந்தூர் சங்கர், பி.ஜே.பி.மாவட்ட செயலாளர் ராஜவேலு, ஐ.ஜே.கே.கட்சி மாவட்ட தலைவர் நெமிலி கா.கார்த்தி, ம.தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இம் மாவட்டத்தில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் மல்லை சத்யாவிற்கு பம்பரம் சின்னத்தில் வாக்களிக்க கோரி சிறப்புரையாற்றினார்கள். ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சோமு அனைவரையும் வரவேற்று பேசினார். பி.ஜே.பி.மாவட்ட தலைவர் பலராமன், பா.ம.க மாவட்ட தலைவர் காஞ்சிகுமாரசாமி பா.ம.க மாவட்ட துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், தே.மு.தி.க. உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன், மற்றும் ம.தி.மு.க நிர்வாகி கே.சங்கரன். உட்பட பலர் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி ம.தி.மு.க வேட்பாளர் மல்லைசி.சத்யா பேசியது:- 16-வது மக்களவை பொதுத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் நரேந்திரமோடி பிரதமராக முடியும் எனவே நம்கூட்டணி கட்சியினர் ஒற்றுமையோடு பாடுபட வேண்டும் 2014 பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இக்கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் 2016 தமிழக சட்ட மன்ற தேர்தலில் இக்கூட்டணி வெற்றி உறுதி என்றார் மல்லைசத்யா ம.தி.மு.க நிர்வாகி உத்தரமேரூர் கே. சங்கரன் நன்றி கூறினார்.  

No comments