Disqus Shortname

பெண்கள் பாதுகாப்பு உரிமையை நோக்க உலக மகளிர் தினவிழா

உத்தரமேரூர் மார்ச்,17
உத்தரமேரூரை அடுத்த எல்.எண்டத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று பெண்கள் பாதகாப்பு உரிமையை நோக்கி உலக மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்கு எல்.எண்டத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர்  எஸ்.முனியம்மாள் தலைமை தாங்கினார். பெண்கள் செயல்பாட்டு கூட்டமைப்பு தலைவி எஸ்.கலைச்செல்வி ஏ.நாராயணமூர்த்தி  முன்னிலை வகித்தனர். எ.ஸ்டெல்லா வரவேற்றார். தீட்டாளம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.ஜெயச்செல்வி, பாதூர்நற்செயல் அறக்கட்டளை டாக்டர். எல்.இராஜேந்திரன், பெண்கள் செயல்பாட்டு கூட்டமைப்பு செயலர் ஆ.சுபா, ஆகியோர் மகளிர் தினத்தை போற்றும் வகையில் பல்வேறு கருத்துகள் பொது மக்களிடையே எடுத்துரைத்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் உரிமை பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண்குழந்தைகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

No comments