Disqus Shortname

உத்தரமேரூரில் காங்கிரஸ்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

உத்தரமேரூர் மார்ச்,25

உத்தரமேரூரில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் கூட்டமும் நடைபெற்றது.  காஞ்சி மாவட்ட தலைவர் எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் வி.புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் வட்டார காங்கிரஸ் கட்சிதலைவர் பி.கே.சுப்பிரமணியன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநில தலைவர் சாலவாக்கம் உசேன்பாய், அகஸ்தியப்பமுதலியார், பி.ஏ.சின்னப்பா, ராமகிருஷ்ணன், இராமமூர்த்தி, ஆகியோர் கட்சி தேர்தல் பணி குறித்து சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சி நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தலில் போட்டியிடும் பெ.விஸ்வநாதன் கூறியது திராவிட கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க ஆகியன காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என பகல் கனவு கண்டு வருகிறார்கள். நிச்சயம் அவர்களது கனவை தகற்க்கும் விதமாக தேர்தல் முடிவுகள் இருக்கும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் கடந்த முறை செய்த சாதனைகள் மற்றும் மத்திய அரசின் சாதனைகள் கூறியும் வாக்குகளை சேகரிப்போம். தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் பல கிராமங்களில் உள்ள பல லட்சம் மக்கள் பயன் பெறுகிறார்கள். நீங்கள் மாற்றுக்கட்சிக்கு வாக்களித்தால் இதை முற்றிலுமாக தடுத்து விடுவார்கள் எனவே கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க பொது மக்களிடம் தீவிரபிரச்சாரம் செய்யவேண்டும் என்று கூறினார். முடிவில் என்.காசி நன்றிகூறினார்.

No comments