Disqus Shortname

இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க கருத்தரங்கம்

உத்தரமேரூர் மார்ச்,05

உத்தரமேரூர் தாலுக்கா காவனூர்புதுச்சேரி கூட்ரோடு சுப்பையா தோட்டத்தில்
 புதன்கிழமையன்று இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில்
 கருத்தரங்கம் நடந்தது. இயற்கை வழி வேளாண்மை நிறுவனர் கண்ணன்இராஜகோபால் தலைமை தாங்கினார். தோட்ட உரிமையாளர் சி.சுப்பையா வரவேற்றார். இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்க செயலாளர் சின்னாளம்பாடி என்.இரவி, அமுதகரசன் தயாரிப்பு பற்றியும்  பொருளாளர் கொடுர் என்.ரவிந்திரன் பஞ்சகாவிய தயாரிப்பு, ஏஜென்ட் கோ.தவனகிரி மண்புழு உரம் தயாரித்தல் வானகம் பிரதிநிதி அரியனூர் ஜெயச்சந்திரன் இயற்கையின் நன்மைகள் பற்றியும், இந்திய இயற்கை விவசாயிகள்  சங்க பிரதிநிதி வி.பி.முரளி, விற்பனை முறைகளை பற்றியும் எடுத்துரைத்தனர். உத்தரமேரூர் வட்டார உழவர்கள் சங்கதலைவர் அ.தனஞ்செழியன் துணைத்தலைவர் க.நிர்மல்குமார். செயற்குழு உறுப்பினர்கள் மு.பரசுராமன், சி.இராமசாமி,  கி.சக்திவேல், அ.அண்ணாதுரை,  ஒன்றிய அமைப்பாளர் மா.நாகராஜ், துணைச்செயலாளர் கே.சண்முகம், பொருளாளர் தணிகைமலை உட்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கதலைவர் சோழனூர் மா.ஏழுமலை நன்றி கூறினார்.

No comments