உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 8 லட்சம் மதிப்பீட்டில் 3000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கல்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் அடுத்த மணல்மேடு, புத்தளி,
புலிவாய், கண்ணிகாபுரம், இருமரம், காவாம்பயிர், ஆதவப்பாக்கம் வெங்கச்சேரி, செம்மரம் ஆகிய பகுதிகளில் உள்ள 3000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவருமான வாலாஜாபாத் கணேசன் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணை, காய்கறி என 15 நாட்களுக்கு
தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கிச்சென்றனர். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் தங்கபஞ்சாட்சரம், பிரகாஷ்பாபு, வேலு, இளைஞரணி துரைபாபு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், நிர்வாகிகள் ஆதவப்பாக்கம் ராமன், ரஞ்சித் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
--
--
No comments