Disqus Shortname

உத்திரமேரூரில் தடையை மீறி திறந்த 3 கடைகளுக்கு சீல்

உத்திரமேரூர் 20/04/2020
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.ஊரடங்கின் போது மளிகை கடை, காய்கறி கடை மருந்தகம் என அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் பஜார் வீதியில் இறைச்சிக்கடை, எலக்ரிகல்ஸ் கடை மற்றும் செல் போன் கடை என 3 கடைகள் உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்தது. இதில் சில கடைகளில் சமூக இடைவெளியின்றி பொது மக்கள் பொருட்களை வாங்க குவிந்தனர். இது குறித்து வருவாய் அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிறப்பு தனி துணை ஆட்சியர் தங்கவேலு, மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ராஜேந்திரன், உத்திரமேரூர் தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் வருவாய்துறையினர் உத்திரமேரூர் பஜார் வீதியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட இக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பஜார் வீதியில் சுற்றித்திரிந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments