Disqus Shortname

உத்திரமேரூரில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு பஜார் வீதியில் சுற்றிதிரிந்தவர்களுக்கு எச்சரிக்கை

உத்திரமேரூர் 28/04/2020
நாடுமுழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்ததைத் தொடர்ந்து உத்திரமேரூரில் காய்கறி, மளிகைக்கடைகள், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் 1 மணி வரை திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் உத்திரமேரூர் மருத்துவமனை பஸ் நிலையம் பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சார் ஆட்சியர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் கஸ்தூரி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டனர். ஆய்வின் போது மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகள் சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து
பஜார் வீதியில் திறக்கப்பட்டுள்ள காய்கறிக்கடைகள் மருந்தகங்களில் பார்வையிட்டு இடைவெளி விட்டு பொருட்களை வாங்கவும் முககவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தினர். பின்னர் பஜார் வீதியில் சுற்றிதிரிந்தவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். நிகழ்வின் போது வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், தனி வட்டாட்சியர் லோகநாதன், காவல்  ஆய்வாளர் விநாயகம், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments