Disqus Shortname

உத்திரமேரூரில் பரபரப்பு கள்ள காதல் விவகாரம் வாலிபர் அடித்து கொலை


உத்திரமேரூர் ஏப்ரல் 25

உத்திரமேரூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பருத்திக்கொள்ளை பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் 38 இவர் திருமணமாகி 2 வருடங்களாகிறது. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனிமையில் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திவ்யா 28 கணவர் ஜெயகுமாருடன் பருத்திக்கொள்ளை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகசுந்தரத்திற்கும் திவ்யாவிற்கும் கல்லக்காதல் ஏற்பட்டது. இது திவ்யாவின் கணவர் ஜெயகுமாருக்கு தெரியவர ஜெயகுமார் திவ்யாவிடம் கண்டித்துள்ளார். திவ்யா அவரது பேச்சை கேட்காமல் தொடர்ந்து சண்முகசுந்தரத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திணேஷ் 22 இருவரும் சண்முகசுந்தரத்தினை மல்லியங்கரைகனை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஜெயகுமார் அருகில் இருந்த கட்டையை எடுத்து சண்முகசுந்தரத்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலநின்றி உயிரிழந்தார். தகவலறிந்த உத்திரமேரூர் காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ஜெயகுமார் மற்றும் திணேஷ் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொரானா விவகாரம் தீவிரமடைந்துள்ள இந்த சமயத்தில் இந்த கொலை சம்பவம் பொது மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

No comments