Disqus Shortname

உத்திரமேரூரில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மற்றும் அமைப்பு சாரா தொழியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் எம்.எல்.ஏ. எம்.பி வழங்கினர்.

உத்திரமேரூர் 22/04/2020
உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம், காக்கநல்லூர், காரியமங்கலம் மற்றும் உத்திரமேரூரில் உள்ள அமைப்பு சாரா தொழியாளர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் .எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி. சிறுவேடல் செல்வம் ஆகியோர் வழங்கினர். இதில் அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதேப் போல் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது. நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் ஏழுமலை, சுப்பையா,இலக்கிய அணி கோபாலகிருஷ்ணன், பொறியாளர் அணி சசிகுமார்,  வேடபாளையம் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments