உத்திரமேரூர் அருகே சாலவாக்கத்தில் 4 லட்சம் மதிப்பில் 1200 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் எம்.எல்.ஏ. எம்.பி வழங்கினர்.
உத்திரமேரூர் 26/04/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம், குரும்பரை மற்றும் சுற்றியுள்ளபகுதிகளை சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் .எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி. சிறுவேடல் செல்வம் ஆகியோர் வழங்கினர். இதில் ரூ.4
லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் இவர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி செயலர்கள் சக்திவேல், வெங்கடேசன், நிர்வாகிகள் அப்பாதுரை, நடராஜன், மணி, பாபு, அழகப்பன், நந்தா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments