உத்திரமேரூரில் அருகே வி.சி.க சார்பில் 550 பழங்குடியின குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி
உத்திரமேரூர் நகர விடுதலை சிறுத்தைகள்
கட்சி சார்பில் உத்திரமேரூர்
அடுத்த அரசாணிமங்கலம், வேடபாளையம், பென்னலூர் மற்றும் அம்மையப்பநல்லூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 550 பழங்குடியின குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். இவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அரிசி, பருப்பு சமையல் எண்ணை, காய்கறிகள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் கவியரசு தலைமையில் நகர
துணை செயலாளர் ரவி, பொருளாளர் ராஜி,
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சிறுத்தை சிவா, நிர்வாகிகள்
சிந்தனை சிவா, பரமசிவம், விஸ்வநாதன்,
உட்பட கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருடகளை வழங்கினர்.
No comments