உத்திரமேரூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் 10 ஊராட்சிகளில் 2450 ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் விநியோகம்.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுக்காக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை கோதுமை உள்ளிட்ட பொருடகள் இலவசமாகவும் மற்றும் நிவாரணத் தொகையாக ரூ. 1000 பணமும் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நிவாரணப் உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிமுக சார்பில் இருளர் பழங்குடியினர்கள், நறிகுறவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உத்திரமேரூர் ஒன்றியத்தில் சித்தனக்காவூர், திருப்புலிவனம், சாலவாக்கம், குரும்பரை, சிறுபினாயூர், திருவந்தவார், தண்டரை, இடையம்புதூர், குண்ணவாக்கம் மற்றும் அன்னாத்தூர் ஆகிய கிராமங்களில் அதிமுக சார்பில் 2450 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு எண்ணை காய்கறி உள்ளிட்டவைகள் அத்தியாவசிய பொருட்களை நிவாரண உதவிகளாக காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார். மேலும் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க அறிவுரைகள் வழங்கினார். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தருமன், தங்கபஞ்சாட்சரம், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன், சாலவாக்கம் மூவேந்தன், இளைஞரணி நிர்வாகி துரைபாபு, நிர்வாகிகள் வேலு, அ.பி.சத்திரம் பெருமாள், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments