Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தடையை மீறி திறந்த அடகு கடைகளுக்கு சீல்

உத்திரமேரூர் 29/04/2020
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கின் போது மளிகை கடை, காய்கறி கடை மருந்தகம் எனஅத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் அடுத்த படூர் கூட்டுரோடில் அடகு கடை
ஒன்று உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்தது. இது குறித்து வருவாய் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உத்திரமேரூர்
தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் வருவாய்துறையினர் படூர் கூட்ரோடிற்கு
விரைந்து சென்று அங்கு விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து அங்கு முககவசம் இன்றி சுற்றித்திரிந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments