Disqus Shortname

மின்கம்பிகள் திருட்டு: 3 பேர் கைது

உத்திரமேரூர் டிச 08.

உத்திரமேரூர் அருகே மின் ஒயா் திருடிய மூவரை பொதுமக்கள் பிடித்து
காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது, உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் அண்மையில் பெய்த
தொடர் மழை காரணமாக அவ்வப்போது மின்வெட்டு  ஏற்பட்டு வந்தது,  இந்நிலையில்
உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது
 மின்வெட்டு காரணமாக கிராம மக்கள் தெருக்களில் அமர்ந்து கொண்டிருந்தனர்
அப்போது வயல்வெளிக்கு செல்லும் மின் ஒயர் கம்பத்தில் இருந்து தீடிரென
அறுந்து விழுந்தது பதரிய மக்கள்  அருகில் சென்று பார்த்த போது 3பேர் மின்
ஒயர்களை அறுத்து எடுத்துக்கொண்டிருந்தனர் இதையடுத்து  இவர்களை பொதுமக்கள்
விரட்டி பிடித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ
இடத்திற்கு வந்த போலீசார் மின் ஒயர்களை திருடியவர்களை கைது செய்து
விசாரனை நடத்தினர், விசாரனையில் சுமார் 70மீட்டர் ஒயர் திருடியதும்
இவர்கள் உத்திரமேரூரை சேர்ந்த அரவிந்தராஜ் 20, கார்த்திகேயன் 24, ஜேம்ஸ்
19, என்பதும் தெரியவந்தது  இவர்கள் மூவரையும் சாலவாக்கம் போலீசார் கைது
செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

No comments