செய்யாறு பாலம் சீரமைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் டிச
14.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரியில்
செய்யாற்று பாலம் கடந்த மழையில் உடைந்து 10 நாட்களாக போக்குவரத்து தடைஏற்பட்டது, உத்திரமேரூரில்
இருந்து கல்லமாநகர், சோமநாதபுரம், ஆனைப்பள்ளம், மருதம், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி,
மணல்மேடு வழியாக வெங்கச்சேரி வரை செல்லும் பயணிகள் உத்திரமேரூர் காஞ்சிபுரம் மேல்ரோடு
வழியாக செல்ல வேண்டிய நிலைஉள்ளது. அரை மணி நேரம் கூடுதல் ஆவதுடன், கூடுதல் பஸ் கட்டணம்
கொடுத்து பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று செய்யாறு பாலம் உடைப்பு சீர்
செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை காஞ்சி மாவட்ட ஆட்சியா் இரா.கஜலட்சுமி
கால்நடை பாரமரிப்புதுறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜபாத் பா.கணேசன்
பாராளுமன்ற உறுப்பினர். மரகதம்குமரவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை,
குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமுர்த்தி, சசிகுமார், விஜய், ராமன், ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
No comments