Disqus Shortname

உத்திரமேரூர் வட்டத்தில் வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களை எங்கு பெறலாம்?: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள நில பட்டா, வீட்டுமனை பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம் மற்றும் வீட்டு கிரைய பத்திரம், ஓட்டுனர் உரிமச்சான்று மற்றும் வாகன பதிவு சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும் பொருட்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில்  இன்று14-12-2015 (திங்கட்கிழமை) முதல் 28-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது .உத்திரமேரூர் வட்டத்துக்கு அதே பகுதியில் உள்ள சக்தி திருமண மண் டபத்திலும் 14 முதல் 27ம் தேதிவரை நடக்கிறது.வெள்ளத்தில் சான்றிதழ்கள், ஆவணங்களை இழந்தவர்கள் முகாம்களில் நகல் கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் நகல்கள் இலவசமாக அளிக்கப்படும்.

No comments