எஸ்.மாம்பாக்கம் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்படுமா?
உத்திரமேரூர்;எஸ்.மாம்பாக்கம் சாலையின் தாழ்வான பகுதியில், தரைப்பாலம்
அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர்
ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, கிளக்காடியில் இருந்து, சிறுபினாயூர்
செல்லும் இணைப்பு சாலையில், எஸ்.மாம்பாக்கம் கிராமம் உள்ளது.
மழைக்காலங்களில், சாலவாக்கம், ஆலப்பாக்கம், திருவந்தவார் ஆகிய ஏரிகள்
நிரம்பினால், உபரிநீர் இச்சாலையின் தாழ்வான பகுதி வழியாக, எஸ். மாம்பாக்கம்
ஏரிக்கு சென்றடைகிறது. அச்சமயத்தில், சாலை யில் வெள்ளம் செல்வதால்,
போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, எஸ்.மாம்பாக்கம், சிறுபினாயூர்,
திருவந்தவார் உள்ளிட்ட கிராமவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே,
இந்த சாலையில் தாழ்வான பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என,
அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments