உத்தரமேரூர் 09 December 2015;
மழையால் உடைந்த உத்தரமேரூர் -வெங்கச்சேரி செய்யாற்றுப் பாலத்தின் சீரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
உத்தரமேரூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும்
கீழ்சாலையில் வெங்கச்சேரி செய்யாற்றுப் பாலம் கடந்த 10 தினங்களுக்கு முன்
உடைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால்
உத்தரமேரூர், மல்லிகாபுரம், ஆனைப்பள்ளம், மருத்துவாம்பாடி, திருப்புலிவனம்,
மணல்மேடு, வெங்கச்சேரி வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இக்கிராமங்களில் உள்ள மக்கள் காஞ்சிபுரம் செல்ல
உத்தரமேரூரில் இருந்து மேல்சாலை வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை
ஏற்பட்டது.
இதுகுறித்து எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசனிடம்
பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து பாலத்தை சீரமைத்து பேருந்து
போக்குவரத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ உத்தரவிட்டார். அதன்படி
பணி தொடங்குவதற்கான கட்டுமான உபகரணங்கள், குழாய்கள் ஆகியவை செவ்வாய்க்கிழமை
வந்திறங்கின. அவற்றை எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் பார்வையிட்டார்.
ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாலம் சீரமைப்புப் பணி தொடக்கம்
Reviewed by Uhiramerur News.Com Admin
on
December 09, 2015
Rating: 5
No comments