Disqus Shortname

உத்திரமேரூரில் தே.மு.தி.க.செயல்வீரா்கள் கூட்டம்.

உத்திரமேரூர் டிச 22.

உத்திரமேரூர் ஒன்றிய தே.மு.தி.க சார்பில் நேற்று செயல்வீரா்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் வெங்கடேசன், வீராமணி, சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைச்செயலாளர் வி.பி.ஜான் அனைவரையும் வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்டகழக பொறுப்பாளர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் அவர் கூறியதாவது தற்போது பெய்த கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஜெயலலிதா  ஹெலிகாப்டர் முலம் சென்று பார்வையிட்டார். ஆனால் தேமுதிக தலைவர்
விஜயகாந்த் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிப்புக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார் வருகின்ற 2016 ல் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியில் அமர கட்சிதொண்டர்கள் மக்களிட்ம் நேரிடையாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார் இக்கூட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments