Disqus Shortname

மக்கள் நீதிமன்றம்

காஞ்சிபுரம் டிச, 22
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நிதிமன்றத்தில் நேற்று மக்கள் நிதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும் நீதிபதியுமான எம்.ஜெய்சங்கர் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலம் முன்னிலையில் மானாமதி களை இந்தியன் வங்கியின் 158 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இதில் 62 வழக்குகள் முடிவுற்றது. இதில் ரூ.18,24,000 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. அதில் உடனடி வசூலாக ரூ.2,64,500 வசூலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தன்னார்வலர் ஜெயந்தி உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாகி புவிராஜன் சிறப்பாக செய்திருந்தார்.

No comments