மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் அறிவியல் கணித கண்காட்சி
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் குளோபல் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித
கண்காட்சி நேற்று நடைப்பெற்றது. நிகழ்ச்சி பள்ளி முதல்வர் சாந்திபாலாஜி தலைமை தாங்கினார்.
மீனாட்சி அம்மாள் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் கவிராஜன், நிர்வாக அலுவலர் வாசுதேவன்,
சமுதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கினைப்பாளர் ராஜேந்திரன், பொரியாளர் மேகவண்ணன் ஆகியோர்
சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு விழாவினைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
மாணவர்கள் வகுப்பு வாரியாக தங்களின் படைப்புகளை அரங்குகள் அமைத்து விளக்கிக் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டு சிறந்த படைப்பை தேர்வு செய்து மாணவர்களுக்கு
பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். நிகழ்ச்சியினை பள்ளி ஆசிரியை பிரியாலட்சுமிராஜேந்திரன்
தொகுத்து வழங்கினார். பெற்றோர்கள் மாணவர்களின் படைப்புகளைப் பார்வையிட்டனா் பள்ளியின்
துணை முதல்வர் தெய்வநாயகிமுத்துக்கருப்பன் நன்றி கூறினார்.
No comments