Disqus Shortname

பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டம்

உத்திரமேரூர் :     
உத்திரமேரூரில் இருந்து தாம்பரத்திற்கு, அரசு பேருந்து சரிவர இயக்குவதில்லை என ஆத்திரமடைந்த பயணிகள், அரசு பேருந்தை சிறைப்பிடித்து, நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உத்திரமேரூரில் இருந்து, செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு, தடம் எண் 504 மற்றும் 560 ஆகிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில மாதங்களாகவே இப்பேருந்துகள், காலை நேரத்தில் சரிவர இயக்கப்படுவதில்லை என
தெரிகிறது.  மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், காலை 6:00 மணி முதல், 7:00 மணி வரையில் இயக்கப்படுகின்ற பேருந்துகள் முழுவதுமாக இயக்கப்படவில்லை என, பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, சென்னையில் இருந்து வந்த போளூர் வரை இயக்கப்படும், தடம் எண் 148 அரசு பேருந்தினை சிறைப்பிடித்த பயணிகள், சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பயணிகளிடத்தில் பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததின் பேரில் பயணிகள் கலைந்து சென்றனர்.

No comments