Disqus Shortname

சாலவாக்கம் பள்ளியில் சைக்கிள் வழங்கும் விழா

உத்திரமேரூர் ஜன, 26
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் மற்றும் கம்மாளம்பூண்டி அரசினர்
மேல்நிலைப்பள்ளிகளில்
பள்ளி தலைமையாசிரியர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்
டி.குமார், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர்
பாரிவள்ளல் வரவேற்றார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்
க.சுந்தர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி
சிறப்புரையாற்றினார் இதில் அவர் கூறியதாவது அரசு வழங்கும் நலத்திட்ட
உதவிகளை மாணவர்கள் தங்கள் கல்விக்காக பயன்படுத்திகொள்ள வேண்டும் மேலும்
வரவிருக்கும் பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று
100சதவீதம் தேர்ச்சியை அடைய வேண்டும் முதல் மூன்று இடங்களைபிடிக்கும்
மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில்
தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர் சோழனூர்
மா.ஏழுமலை, இளைஞரணி நிர்வாகி பெ.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 347 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
சைக்கிள் வழங்கும் விழா நடந்தது விழாவில்

No comments