Disqus Shortname

உத்திரமேரூரில் சைக்கிள் வழங்க வந்த அதிமுக எம்.பியை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

உத்திரமேரூர் ஜன,23

உத்திரமேரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்
வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு அதிமுக எம்.பி மரகதம்குமரவேல்
கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்குவதாக பள்ளி வாயிலில் பேனர்
வைத்து நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்திருந்தனர். உத்திரமேரூர் திமுக
எம்.எல்.ஏ க.சுந்தருக்கு தகவல் அளிக்காமல் விழா ஏற்பாடுகள் நடப்பதாக
கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் பள்ளி வாயிலில் அதிமுக
எம்.பி மரகதம்குமரவேல் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர். தகவலறிந்த பேலீசார் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி
எம்.பி பள்ளியினுள் சென்று வருவதாக கூறினர். அதன் அடிப்படையில்
பள்ளியினுள் சென்ற எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் சைக்கிள் கொடுக்க
முற்ப்பட்டனர். இதை கண்ட திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் அதிமுக எம்.பி
மற்றும் அதிமுகவினர் சைக்கிள் வழங்காமல் திரும்பிச் சென்றனர். இதனால்
போலீசார் திமுகவினரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

No comments