Disqus Shortname

உத்திரமேரூரில் பீட்டாவிற்கு எதிராக கோக், பெப்சி உள்ளிட்ட பானங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து இளைஞர்கள் போராட்டம்

உத்திரமேரூர் ஜன, 22 உத்திரமேரூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும்
பொது மக்கள் 5 வது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு பகலாக
நடக்கும் இந்த போராட்டத்தில் பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்திட
வேண்டும், ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் மாணவர்கள் நடத்திய
ஆர்ப்பாட்டத்தில் நேற்று பீட்டா அமைப்பிற்கு எதிராக கோக், பெப்சி
உள்ளிட்ட பானங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தும், கண்கள், வாய்களில்
கருப்பு துணி கட்டிக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.

No comments