Disqus Shortname

உத்திரமேரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் ஜன 12
 உத்திரமேரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு பேரணி   நடந்தது. பேரணியினை  காஞ்சிபுரம்
போக்குவரத்து கழக மோட்டார் ஆய்வாளர் முனுசாமி கொடியசைத்து துவக்கி
வைத்தார். தனியார்(தூர்கா ) ஓட்டுநர் பள்ளி நிர்வாகி உமாபதி முன்னிலை வகித்தார். பேரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது அரசு பள்ளி வளாகத்தில்  துவங்கி கேத்தாரீஸ்வரர் கோவில் தெரு, பஜார் வீதி, சன்னதி தெரு, பெரிய  நாராசம் பேட்டை கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வளமாக  சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இப்பேரணியில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியவாறும்,  பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்ப்படுகளை உத்திரமேரூர் ரோட்டரி சங்கம்
மற்றும் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் இணைந்து சிறப்பாக
செய்திருந்தது. விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளி  வாகன ஓட்டுநர்கள் பொது மக்கள் உ
ட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments