Disqus Shortname

கண்ணீல் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்பாட்டம்

உத்திமேரூர் பிப், 02
உத்திரமேரூர் ஒன்றியத்தில் அண்மையில் தாக்கிய வர்தா புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காத வட்டாட்சி  நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்ணீல்
கருப்பு துணி கட்டிக் கொண்டு கண்டன ஆர்பாட்டம் நேற்று நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர் கே.மனோகரன் தலைமை தாங்கினார். வட்ட  செயலாளர் பாஸ்கரன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.கே.பெருமாள், வினாயகம், அனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் வர்தா புயல்  தாக்கத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொது மக்கள் கொடுத்த புகார்  மனுக்கள் மீது எந்த விசாரணை செய்யாத உத்திரமேரூர் வட்டாட்சியர் மற்றும்  வட்டாட்சி ஊழியர்களை கண்டித்தும், புயலில் பாதிக்கப்பட்ட நிலங்கள்,  மரங்கள் வீடுகளை ஆய்வு செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு, புயலின்  பாதிப்புக்களை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், கட்டாய வசூல் செய்து கொடிநாள் என்று கணக்கு காட்டும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை  எடு உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments