உத்திரமேரூரில் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
உத்திரமேரூர் ஜன, 24
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
கல்லூரி மாணவர்கள், பெண்கள் பொது மக்கள் என அனைவரின் மீதும் நேற்று
முன்தினம் போலீசார் தடியடி அடி நடத்தி தாக்குதலில் ஈடுபட்டு
போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பெரும்பாளான மாணவர்கள், பெண்கள்
குழந்தைகள் என பலரும் காயமடைந்துள்ளனர். இதனை கண்டித்தும் உத்திரமேரூர்
அடுத்த திருப்புலிவனம் பகுதியிலுள்ள அரசினர் கலை கல்லூரி
மாணவ-மாணவியர்கள் நேற்று வகுப்புக்களை புறக்கணித்து கல்லூரி வாயிலில்
அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜல்லிக்கட்டிற்கான
தடையினை உடனடியாக நீக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மெரினாவில்
போராட்டம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரியும், தமிழகத்தில் பீட்டா அமைப்பினை முழுவதுமாக தடை
செய்திடக் கோரியும் கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் எதிர்ப்பை
வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
கல்லூரி மாணவர்கள், பெண்கள் பொது மக்கள் என அனைவரின் மீதும் நேற்று
முன்தினம் போலீசார் தடியடி அடி நடத்தி தாக்குதலில் ஈடுபட்டு
போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பெரும்பாளான மாணவர்கள், பெண்கள்
குழந்தைகள் என பலரும் காயமடைந்துள்ளனர். இதனை கண்டித்தும் உத்திரமேரூர்
அடுத்த திருப்புலிவனம் பகுதியிலுள்ள அரசினர் கலை கல்லூரி
மாணவ-மாணவியர்கள் நேற்று வகுப்புக்களை புறக்கணித்து கல்லூரி வாயிலில்
அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜல்லிக்கட்டிற்கான
தடையினை உடனடியாக நீக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மெரினாவில்
போராட்டம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரியும், தமிழகத்தில் பீட்டா அமைப்பினை முழுவதுமாக தடை
செய்திடக் கோரியும் கோஷங்கள் எழுப்பியும் பதாகைகள் ஏந்தியும் எதிர்ப்பை
வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட
மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
No comments