சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும்விழா
உத்திரமேருர் ஜன 09
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொன் விழா ஆண்டு, பள்ளி தலைமையாசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா உள்ளிட்ட முப்பெரும்விழா நேற்று
பள்ளிவளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர் டி.குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருப்பாளர் ஐ.பாபு அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பானந்தம் ஓய்வு பெருவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது இதில் தலைமை ஆசிரியரின் பணியினை பாராட்டும் விதமாக அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,
உத்திரமேரூர் எம்,எல்,ஏவுமான க.சுந்தர் கலந்து கொண்டு தங்கள்
பள்ளிப்பருவத்தில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்வுகளையும், பள்ளியின்
பெருமையினையும் குறித்தும் பள்ளிப்படிப்பின் அவசியம் குறித்தும் விளக்கி
பேசினர். பின்னர் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று
இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கும் பள்ளியில் நடந்த தடகளப்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கும் எம்.எல்.ஏ க.சுந்தர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத் தலைவர் எம்.உசேன், மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லைசத்தியா உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி
மாணவ- மாணவியரின் நடனம், பாட்டு, நாடகம், யோகா போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பொன் விழா ஆண்டு, பள்ளி தலைமையாசிரியர் பணி ஓய்வு பாராட்டு விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா உள்ளிட்ட முப்பெரும்விழா நேற்று
பள்ளிவளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் பெற்றோர்
ஆசிரியர் கழகத் தலைவர் டி.குமார் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருப்பாளர் ஐ.பாபு அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பானந்தம் ஓய்வு பெருவதை முன்னிட்டு அவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது இதில் தலைமை ஆசிரியரின் பணியினை பாராட்டும் விதமாக அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,
உத்திரமேரூர் எம்,எல்,ஏவுமான க.சுந்தர் கலந்து கொண்டு தங்கள்
பள்ளிப்பருவத்தில் நடந்த சுவாரஸ்சியமான நிகழ்வுகளையும், பள்ளியின்
பெருமையினையும் குறித்தும் பள்ளிப்படிப்பின் அவசியம் குறித்தும் விளக்கி
பேசினர். பின்னர் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று
இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கும் பள்ளியில் நடந்த தடகளப்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கும் எம்.எல்.ஏ க.சுந்தர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத் தலைவர் எம்.உசேன், மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லைசத்தியா உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி
மாணவ- மாணவியரின் நடனம், பாட்டு, நாடகம், யோகா போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும்
ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments