Disqus Shortname

உத்திரமேரூரில் மைலார் திருவிழா

உத்திரமேரூர் ஜன, 22 உத்திரமேரூரில் செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் மைலார்
திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூரில் செங்குந்தர் கைத்தறி  நெசவாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மைலார் திருவிழா  கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மைலார் திருவிழா நேற்று வெகு  விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னதாக மைலார் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு நல்லத் தண்ணீர்  குளக்கரையிலிருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வானவேடிக்கைகளுடன்  மேளதாளங்கள் முழங்க வீதியுலா வந்தது. அப்போது விரதமிருந்த பக்தர்கள் அலகு  குத்தி சுவாமிக்கு தங்களது நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். பின்னர்  பாவோடை தோப்பு தெருவில் உள்ள மைதானத்தில் சுவாமி வந்தடைந்த பின்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து  மைதானத்தில் இளைஞர்களுக்கு உறியடி போட்டியும், மகளிருக்கு கோலப்போட்டிகள்
என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில்  வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்த
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை  இளைஞர்களுடன் விழா குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழாவிற்கு உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

No comments