Disqus Shortname

உத்திரமேரூரில் சுகாதார திருவிழா

உத்திரமேரூர் ஜன 08

உத்திரமேரூர் பேரூராட்சியில் நேற்று சுகாதார திருவிழா நடைப்பெற்றது.
விழாவின் தொடக்கமாக மகளிருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளாக
கோலப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதைப்போட்டிகள் உட்பட பல்வேறு
போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் மகளிர்சுய உதவிக் குழு பெண்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் நாட்டின் அறியவகை நாணயங்களின்
கண்காட்சி பேரூராட்சி வளாகத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது,
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்  மக்கும் குப்பை, மக்கா குப்பை என
தரம் பிரிக்கப்பட்டு அதிலிருந்து பிளாஸ்டிக் போன்ற மக்கா கழிவுகளைக்
கொண்டு கண்கவரும் கலைப்பொருட்கள் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும்
மக்கும் குப்பைகளைக் கொண்டு  வீட்டுத் தோட்டம் மூலிகைச்செடி வளர்ப்பு,
மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்டவைகள் பொதுமக்கள் பார்வைக்காக
வைக்கப்பட்டு அதன் செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேப் போல் பள்ளி
மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்களின் அறியவகைப் படைப்புக்களை
வைத்து அதற்கான விளக்கங்களை அளித்தனர். கிராமிய கலை நிகழ்ச்சிகள்,
பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில்
கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில்
பேரூராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி
ஊழியர்கள், மாணவ- மாணவியர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments