Disqus Shortname

வாலாஜாபாத் பா.கணேசன் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உத்தரமேரூர்.மே, 31,

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வாலாஜாபாத் பா.கணேசன் மானாம்பதி, சாலவாக்கம், கருக்குப்பேட்டை, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
முதல்வராக ஜெயலிலதா பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மதுபானக் கடைகளின் நேரம் குறைப்பு, 500 மதுபானக் கடைகள் மூடல் என வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபட்டு வருகிறார். அவரின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் நான் காத்திருக்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஏ.ராஜாமணி, பொ.சசிகுமார், கா.ஜெயவிஷ்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments