Disqus Shortname

கர்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி

உத்திரமேரூர் ஜீன், 21
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி சமுதாய சுகாதார நிலையத்தில் சித்த
மருத்துத் துறை சார்பில் சர்வே தேச யோகா தினதை முன்னிட்டு கர்பிணி
தாய்மார்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில்
வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி தலைமை தாங்கி யோகா பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புறையாற்றினர். சித்த மருத்துவர் கிரிஜா முன்னிலை வகித்தார். மருத்துவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். மருந்தாளுனர் பாம்பன் பழனி மற்றும் சித்த மருத்துவர் கிரிஜா ஆகியோர் அனைவரும் பயன் தரக்கூடிய முக்கிய யோகாவினை செயது காண்பித்து அதன் பயன்களை விளக்கி கூறினர். பின்னர் கர்பிணி தாய்மார்கள் கர்பகாலங்களில் செய்ய கூடிய முக்கிய யோகாவினை செய்து காண்பித்தனர். அப்போது கர்பிணி தாய்மார்கள் உடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச் செல்வன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ், மானாம்பதி சமுதாய சுகாதார நிலைய ஊழியர்கள், பொது மக்கள், கர்பிணி தாய்மார்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் சித்த மருந்தாளுனர் அன்புச்செல்வி
நன்றி கூறினார்.

No comments