Disqus Shortname

மருதம் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உத்திரமேரூர்  ஜீன் 09
 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மருதம் கிராமத்தில் நேற்று காலை 11,10 மணியளவில் ஸ்ரீசங்கராச்சாரியார் சுவாமிகள் அருளின் படி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புதன்கிழமையன்று முதல்கால பூஜையும் மகா கணபதி ஹோமம் லஷ்மி ஹோமம் நவக்கிரக ஹோமம் துர்கா ஹோமம் பூர்ணாஹீதி நடைபெற்றது. கணபதி ஹோமம் ஸ்ரீ லலிதா சகர்ண பூஜை ஸ்ரீ லலிதா ஹோமம் தன பூஜை தீபாராதணை கும்பகலசமும் ஆலய பிரதட்சனம் முடிந்த பின் ஸ்ரீ அம்மனுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா வியாழக்கிழமையன்று நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது, அனைவருக்கும் மோர், புளியோதரை, தயிர் சாதம், வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூவத்தூர் கிராமம் கோபல அய்யர், மருதம் ஜீ.முனிசாமி மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்

No comments